Advertisement
Advertisement

Australia tour india

சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!
Image Source: Google

சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!

By Bharathi Kannan December 04, 2023 • 11:43 AM View: 159

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியினை பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் இறுதிவரை வெற்றி இலக்கை நோக்கி மிகச் சிறப்பாக முன்னேறி வந்தது. 

Related Cricket News on Australia tour india