Bangladesh vs sri lanka
மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!
இதுவரையில் இந்த உலகக் கோப்பையின் ஞாபகங்களாக எதிர்காலத்தில் நிலைக்க போகிற விஷயங்கள் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த இரட்டை சதம், மற்றும் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்தது இரண்டும் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியாக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது.
இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடியிருக்கின்ற காரணத்தினால், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இதையாவது செய்ய வேண்டிய நெருக்கடியில் இருந்தார்கள். இப்படியான போட்டியில் உள்ளே வந்து விளையாடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக முறையிடப்பட்டு மேத்யூஸ் விக்கெட்டை ஷாகிப் அல் ஹசன் வாங்கினார். இது இரண்டு அணிகளுக்கும் இடையே ஆன பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது.