Advertisement
Advertisement

Ind vs eng

5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!
Image Source: Google

5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!

By Bharathi Kannan March 08, 2024 • 11:56 AM View: 98

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் அந்த அணி முதல்நாள் மூன்றாவது செஷனின் தொடக்கத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 79 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Related Cricket News on Ind vs eng