India vs pakistan
ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிக மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியை போன்று தடுமாறாமல் ஷாகின் அப்ரிடியின் பந்துகளை அசால்டாக பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசமும் அடித்தார்.