Advertisement
Advertisement

India vs pakistan

பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
Image Source: Google

பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!

By Bharathi Kannan September 08, 2023 • 14:31 PM View: 170

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்றில் நடைபெற்ற போட்டி கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சர்வதேச ரசிகர்கள் பலரும் சோகமடைந்தனர். மிகச்சிறந்த போட்டியாக வந்திருக்க வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், பாதியில் முடிவடைய காரணமான பிசிசிஐ மீதும் விமர்சனங்களும் அதிகரித்தன.

இருப்பினும் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு பலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் புரிய வந்தது. ஷாகின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகிய மூவரும் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்தது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் தயாராக வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினர்.

Related Cricket News on India vs pakistan