Indian cricket
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.