Advertisement
Advertisement

Indian cricket

5th Test Day 3: அஸ்வின் அபார பந்துவீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
Image Source: Google

5th Test Day 3: அஸ்வின் அபார பந்துவீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!

By Bharathi Kannan March 09, 2024 • 12:01 PM View: 115

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அதேபோல் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்வால், சர்ஃப்ராஸ் கான், அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 473 ரன்களைச் சேர்த்தது.

Related Cricket News on Indian cricket