Ipl
எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் - சஞ்சு சாம்சன்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 12 ரன்களை எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன்னுடன் பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். அதன்பின் டிராஸ்விஸ் ஹெட் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.