Joburg super kings
தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - ஃபாஃப் டூ பிளேசிஸ்!
ஐபிஎல் போல தென் ஆப்பிரிக்க வாரியம் நடத்தும் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற அணிகளின் உரிமையாளர்கள் இந்த தொடரில் விளையாடும் அனைத்து 6 அணிகளையும் வாங்கியுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த தொடரில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் அணியை வாங்கியுள்ளது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் கடந்த வருடம் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. இருப்பினும் இம்முறை அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் அந்த அணிக்கு டு பிளேசிஸ் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார்.