Advertisement
Advertisement

Manchester united

IPL teams: Man United owners' interest maybe reason behind BCCI extending date for purchasing tender
Image Source: Google

ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் ஆர்வம்!

By Bharathi Kannan October 21, 2021 • 12:37 PM View: 513

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் விளையாடிவரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்குக் கூடுதலாக ரூ. 7000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் அகமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.

Related Cricket News on Manchester united