Mumbai indians
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை அறிவித்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியில் வளர்ந்துவரும் வீரரான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ், தற்போது இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் முக்கியமான வீரராகவும், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராகவும் பார்க்கப்படுகிறார்.