Neeraj chopra
புதிய தேசிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவை பாராட்டிய அனுராக் தாக்கூர், கவுதம் கம்பீர்!
ஃபின்லாந்து நாட்டின் துருக்கு நகரில் சர்வதேச பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையை படைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சர்வதேச போட்டியில் 88.07 மீட்டரும், அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டரும் ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்திருந்தார்.