Purple cap
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை வீரர் சாய் சுதர்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
பின்னர் சிஎஸ்கே பேட்டிங் செய்த போது கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதையடுத்து டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது.