Reetinder singh sodhi
அவர்களை விட ஹர்திக் பாண்டியா தான் முக்கிய வீரர் - ரிதீந்தர் சிங் சோதி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித், விராட் கோலியைவிட ஹர்திக் பாண்டியா தான் முக்கியமான வீரர் என்று முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆசியக் கோப்பைக்கான தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கப்போவதால் எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 28ஆம் தேதி மோதும் முதல் போட்டியும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.