Rishab pant
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ; காரணம் இதுதான்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கடந்த டிசம்பர் மாதம் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 18 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார். ஆகையால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தற்காலிக கேப்டனாக டேவிட் வார்னர் இந்த சீசனில் நியமிக்கப்பட்டிருக்கிறார். டெல்லி அணி முதல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்டு 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.