Royal challengers bangalore
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டன் குறித்து வெளியான அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக சில அணிகள் பயிற்சிகளையே தொடங்கிவிட்டன. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்பதையே அறிவிக்கவில்லை.
அந்த அணிக்கு 9 ஆண்டுகளாக கேப்டன்சி செய்தும் ஒரு கோப்பை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி பதவி விலகினார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக், டூ பிளசிஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் மார்ச் 12ஆம் தேதியன்று அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.