Royal challengers bangalore
ஐபிஎல் 2022: சகோதரிக்கு உருக்கமான பதிவை வெளியிட்ட ஹர்ஷல் படேல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலின் மூத்த சகோதரி அர்ச்சிதா படேல் ஏப்ரல் 9 அன்று காலமானார். இச்சம்பவம் குறித்து அறிந்த பிறகு, அவர் இரண்டு நாட்கள் ஆர்சிபி அணியின் பயோ பப்புலை விட்டுவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வீட்டிற்கு சென்றார். ஏப்ரல் 12 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் விளையாடவில்லை.
பின்னர் அவர் ஏப்ரல் 16 அன்று டெல்லி கேப்பிட்டல்ஸை பெங்களூர் தோற்கடித்த போது ஆடும் லெவனுக்கு திரும்பினார். உணர்ச்சிவசப்பட்ட ஹர்ஷல் படேல் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மறைந்த சகோதரிக்கு இதயப்பூர்வமான குறிப்பு ஒன்றை எழுதினார்.