Advertisement
Advertisement

Rupa gurunath

 Rupa Gurunath steps down as TNCA president
Image Source: Google

டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரூபா குருநாத்!

By Bharathi Kannan December 31, 2021 • 13:31 PM View: 617

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் 2019 செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார். போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார். 

இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார். வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்ததாக ரூபா குருநாத் கூறியுள்ளார். என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் ரூபா மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது. 

Related Cricket News on Rupa gurunath