Shreyas gopal
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது.
முன்னதாக கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதாலே புதிய கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார். பின்னர் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.