Subhranshu senapati
இளம் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே; ஏலத்திற்கு முன்னே பயிற்சி!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணி தக்க வைத்த 4 வீரர்களாக ஜடேஜா, தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளனர்.
அவர்களை தவிர மீதமுள்ள வீரர்களை சென்னை அணி ஏலத்தின் மூலம் எடுக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாக 24 வயது ஒடிசாவை சேர்ந்த வீரரான சுப்ரன்ஷு சேனாபதி என்கிற வீரரை தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் ஸ்பெஷல் டிரெய்னிங்ற்காக அழைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.