Sussex cricket
புஜாராவுக்கு தடைவிதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் வீரர் செட்டேஸ்வர் புஜாரா கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி மிகவும் மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தக் கூடியவராக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைக்க உதவிய அவர், அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடி ரன் மழை பொழிந்த அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்தார்.