Urvashi rautela
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஊர்வசி ரவுத்தேலாவின் சமூக வலைதளப் பதிவு!
ரிஷப் பந்த் - ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து வந்ததாக தகவல்கள் பரவின. எந்தவித சத்தமும் இன்றி இவர்கள் பிரிந்துவிட்ட போதும், ரிஷப் பண்ட் குறித்து சமீபத்தில் ஊர்வசி கூறிய கருத்தால் பிரச்சினை வெடித்தது.
அதாவது, ஆர்.பி என்ற ஒரு நபர் தன்னை காண நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். தன்னுடன் பேச 16, 17 முறை கால் செய்துள்ளதாகவும் கூறினார். அந்த ஆர்.பி என்பது ரிஷப் பந்த் தான் என கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த பண்ட், விளம்பரத்திற்காக இவ்வளவு கேவலமாக பொய் கூறுகிறார்கள், யாரும் நம்பாதீர்கள் எனக்கூறினார். இதனையடுத்து ஊர்வசியும் பதில் கொடுக்க பிரச்சினை வெடித்தது.