IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Oct 19 2024 17:24 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்து ஆட்டழிந்தது. இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.  அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் என விக்கெட்டி இழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் விராட் கோலி 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய் நான்காம் நாள் ஆட்டத்தை சர்ஃபராஸ் கான் 70 ரன்னுடனும், ரிஷப் பந்த் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் காஅன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் த்னது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்தும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 344 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் தொடங்கிய போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து 170 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

இதில் சர்ஃப்ராஸ் கான் 18 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 150 ரன்னிலும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 99 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின்னர் கேஎல் ராகுல் 12 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை