ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள செய்தி ஒன்று ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடியாய் வந்து விழுந்துள்ளது.

Advertisement

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர் அவி பரோட். 29 வயதே ஆகும் இவர் இன்று மாரடைப்பால் காலமானார். 19வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திகழ்ந்தவர் அவி பரோட். இதுமட்டுமல்லாமல் ராஞ்சி கோப்பை தொடரில் 2019 -20 சீசனில் சவுராஷ்ட்ரா அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Advertisement

அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர். சவுராஷ்டிராவுக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 ஏ பிரிவு போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி ட்ராஃபியில் 53 பந்துகளில் 122 ரன்களை அடித்தார். விரைவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கபட்டது. 

பல விளையாட்டு வீரர்கள் சமீப வருடங்களில் மாரடைப்பால் இளம் வயதிலேயே உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு விளையாட்டு வீரர்களின் மன அழுத்தம் காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு எடுத்துக்கொண்டார்.

21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதகா தெரிவித்துள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் அவரது ஆன்மா சாந்தியடையை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதகவும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய அணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளட்டோரும் தங்கல் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News