BAN vs IND, 2nd Test: வங்கதேசத்தை சுருட்டிய அஸ்வின் & உமேஷ் யாதவ்!

Updated: Thu, Dec 22 2022 18:35 IST
2nd Test, Day 1: India In Pole Position After Ashwin, Umesh Four-fers Skittle Bangladesh For 227 (Image Source: Google)

இந்தியா - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலையில் இருப்பதால் தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி சகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச் நேரம் போக போக பேட்டிங்கிற்கு மிகவும் கடினமாக மாறும் என்பதால் டாஸில் தோற்ற இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்தையும் மாற்றி அமைத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் 14 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அடித்தளம் போட்டு வந்தனர். அப்போது வந்த அஸ்வின் பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தினார். அவரின் சுழலில் சிக்கி நட்சத்திர பேட்ஸ்மேனான ஹுசைன் சாண்டோ 24 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்த முதல் விக்கெட்டிற்கு பிறகு ஒருபுறம் அஸ்வின் மற்றும் மறுபுறம் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரிடம் சிக்கி வங்கதேசம் சின்னாப்பின்னம் ஆனது. சாகீர் ஹாசன் (15 ரன்கள்), கேப்டன் ஷாகிப் அல் ஹசன் (16 ரன்கள் ), முஸ்ஃபிக்கூர் ரஹிம் (26 ரன்கள்), லிட்டன் தாஸ் (25 ரன்கள்) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.

மறுமுணையில் தூண் போல நிலைத்து நின்ற மொமினுல் ஹாக்யூ இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்துக்கொண்டே வந்தார். 200 ரன்களுக்குள் வங்கதேசம் சுருண்டுவிடும் என நினைத்த போது அவர் மட்டும் சதத்தை நோக்கி சென்றுக்கொண்டே இருந்தார். எனினும் அவரை 84 ரன்களிலேயே இந்திய பவுலர்கள் மடக்கினார். இதனால் வங்கதேச அணி 227 ரன்களுக்கெல்லாம் 10 விக்கெட்களையும் இழந்தது.

முதல் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்த அஸ்வின், 2ஆவது போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போல உமேஷ் யாதவும் 4 முக்கிய விக்கெட்களை எடுத்துக்கொடுத்து உதவினார். 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கம்பேக் தந்த ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 14 ரன்களுடனும், கேஎல் ராகுல் 3 ரன்களிலுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை