டி20 உலகக்கோப்பை: மைதான பராமரிப்பாளர் திடீர் மரணம்!

Updated: Sun, Nov 07 2021 21:48 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மைதான பராமரிப்பாளரான தல்ஜித் சிங்குடன் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை பார்த்தவரான மோகன் சிங், கடந்த 2000மாவது ஆண்டில் இந்தியாவில் இருந்து பணி நிமித்தமாக அமீரகத்துக்கு மாறுதலாகி சென்றார்.

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பராமரிப்பாளராக மோகன் சிங் பணியாற்றி வந்த நிலையில் இன்று திடீரென அவர் காலமாகி உள்ளார். அபுதாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து போட்டி தொடங்கும் முன்பாக அவர் காலமாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Also Read: T20 World Cup 2021

இந்தியரான மோகன் சிங்கின் மரணத்தை அமீரக கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. ஆனால் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மோகன் சிங் இன்று மறைந்திருக்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு எனவும் இந்த துயர நிகழ்வு குறித்து விரிவாக கூறுவதாகவும் அமீரக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை