அரசு கொடுத்த நிலத்தை 33 ஆண்டுகள் கழித்து அரசிடமே ஒப்படைத்த கவாஸ்கர்!

Updated: Wed, May 04 2022 19:57 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடியவர் சுனில் கவாஸ்கர். 72 வயதான அவர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 

இதுவரை 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். ஓய்வுக்கு பிறகு போட்டிகளை வர்ணனை செய்வது, கிரிக்கெட் தொடர்பாக எழுதுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா அரசு அவருக்கு மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் இருபதாயிரம் சதுர அடி நிலத்தை வழங்கியது. அந்த இடத்தில் கிரிக்கெட் அகாடமி நிறுவும் நோக்கத்தில் மாநில அரசு அவருக்கு நிலத்தை வழங்கியிருந்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் அகாடமியை கவாஸ்கர் நிறுவவில்லை. அந்த நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. 

அதன்பின் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அதற்கான முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். ஆனால் அது முயற்சியாக மட்டுமே இருந்தது. இந்நிலையில், அந்த நிலத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு மகாராஷ்டிரா வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையம் கடந்த ஆண்டு அவரிடம் கோரிக்கை வைத்தது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இப்போது நிலத்தை அரசு வசம் கவாஸ்கர் ஒப்படைத்துள்ளார். 

இது தொடர்பாக அந்த மாநில வீட்டுவசதி துறை அமைச்சர் ஜிதேந்திரா உறுதி செய்துள்ளார். மேலும் கவாஸ்கர் அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை