ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரஹானே. அடுத்த டெஸ்ட் கேப்டன் என்ற வரிசையில் இருந்த ரஹானே திடீரென்று ஃபார்ம் அவுட்  காரணமாக இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் நடப்பாண்டுக்கான ஓய்வு ஊதிய  பட்டியலில் இருந்தும் ரஹானே நீக்கப்பட்டார். மேலும் ரஹானே 18 மாதம் காலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் ரஹானேவை எடுக்க மற்ற அணிகள் தயக்கம் காட்டியது.

Advertisement

ஆனால்,  தோனி மட்டும் ரஹானேவை  எடுத்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனி வைத்த நம்பிக்கையை ரகானே இரு மடங்கு காப்பாற்றினார்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரகானே 326 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 172 ரன்கள் ஆகும். ரஹானே பங்களிப்பால் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.

Advertisement

இதனை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி ஆட்டத்திற்கு ரஹானேவை தேர்வுக்குழுவினர் சேர்த்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்த ரஹானே அபாரமாக விளையாடி 89 ரன்களை முதல் இன்னிங்ஸ் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், உங்களுடைய இந்த ஆட்டத்திற்கு சிஎஸ்கே தான் காரணமா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ரஹானே, நிச்சயமாக சிஎஸ்கே அணியில் நான் இருந்த நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக செலவழித்தேன் என்று பதில் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ரஹானேவை பாராட்டிய முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ரஹானே உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக  அடி அவருடைய வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்போது நடந்த ஐபிஎல் தொடர் அவருக்கு சுதந்திரத்தை கொடுத்தது.

ரஹானே தனக்கு உள்ள சௌகரியமான சூழல் இருந்து வெளியேறி அதிரடியாக தற்போது விளையாடும் எண்ணத்தை ஐபிஎல் தொடரின் மூலம் அவர் பெற்றார் என்று நினைக்கிறேன். ரஹானே தற்போது எதைப் பற்றியும் நினைக்கவில்லை. அவருடைய உள்ளம் தெளிவாக இருக்கிறது. அதனால் தான் களத்தில் அவர் அதிரடியாக விளையாடுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News