ஐபிஎல் தொடர் மூலம் புகழ் பெற்று இந்திய அணியில் இடம்பிடித்ததில் அம்பத்தி ராயுடுவும் ஒருவர். முதலில் மும்பை, பிறகு சென்னை என இரு அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு, கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டார்.

Advertisement

தற்போது 36 வயதான அம்பத்தி ராயுடு, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் இடம் கிடைக்காத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த நிலையில், தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ராயுடு வுளையாடி வந்தார்.

Advertisement

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவித்தார்.

அவரது பதிவில், “இது எனது கடைசி ஐபிஎல் ஆகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கேவுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

 

மும்பை அணிக்காக 2416 ரன்களும், 14 அரைசதங்களும் அடித்துள்ள ராயுடு, சிஎஸ்கே அணிக்காக 1771 ரன்களும், 1 சதமும், 8 அரைசதமும் அடித்துள்ளார். கடந்த சில போட்டியில் அம்பத்தி ராயுடு தனது பழைய ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறனார். வயதும் ஆவதால் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரராக அம்பத்தி ராயுடு விளங்கினார்.

Advertisement

ஐபிஎல் தொடருக்கு முன்பு கபில்தேவ் நடத்திய ஐசிஎல் டி20 தொடரில் பங்கேற்று பிசிசிஐயால் தடை பெற்ற அம்பத்தி ராயுடு, பிறகு பொது மன்னிப்பு பெற்று ஐபிஎல் தொடரில் களமிறங்கி அதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர். இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டியில் விளையாடி 1694 ரன்களும், 6 டி20 போட்டியிலும் ராயுடு விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் ஓய்வு குறித்து வெளியிட்ட டிவிட்டை அவர் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News