இரண்டு பந்துகளில் 60 லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!

Updated: Sun, Apr 23 2023 12:28 IST
Arshdeep Singh shatters stumps worth 24 lakh twice in insane last-over brilliance vs Mumbai Indians! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, மூன்றாவது பந்தில் திலக் வர்மா கிளீன் போல்டானார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த துல்லியமான யார்க்கரின் மிடில் ஸ்டம்பானது இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேராவும், முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். அதுவும், திலக் வர்மாவிற்கு வீசப்பட்டது போன்ற துல்லியமான யார்க்கரில் இரண்டாவது முறையாகவும் ஸ்டம்ப் உடைந்தது. அர்ஷ்தீப் சிங்கின் இந்த அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடர் சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சூழலில், நடுவரின் எந்த ஒரு சிறிய முடிவும் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயர்தொழில்நுட்ப சாதனங்கள் மட்டுமே இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மைக் மற்றும் கேமரா வசதி அடங்கிய, எல்.ஈ.டி ஸ்டம்புகள் தான் பயன்படுத்தபடுகின்றன. 

ஒரு செட் ஸ்டம்ப்க்ளின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம் ஆகும். அதன்படி, நேற்று அர்ஷ்தீப் சிங் வீசிய வெறும் இரண்டே பந்துகளால் பிசிசிஐக்கு ரூ.60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. துல்லியமாக கூற வேண்டுமென்றால் உடைந்த 2 ஸ்டம்புகளின் மதிப்ப மட்டும் ரூபாய் 24 லட்சம் ஆகும்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியிலும், கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து, கடந்தாண்டு துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முக்கியமான கேட்ச் ஒன்றை அர்ஷ்தீப் சிங் நழுவவிட்டார். 

இதனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதால், அர்ஷ்தீப் சிங் மீது கடுமையான மற்றும் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன். இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் பதலளிக்கும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங், இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை