இலங்கை அணி ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பரபரப்பான நிலையில் இருந்து தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வங்கதேச அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. தற்பொழுது இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார் என்பதை முடிவு செய்யும் போட்டியாக இலங்கை பாகிஸ்தான் நாளை மோதிக் கொள்ளும் போட்டி அமையும். அதே சமயத்தில் மழை அச்சுறுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது.

Advertisement

நேற்றைய போட்டியில் 11 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் வெகு சாதாரணமாக இலங்கையின் பந்து வீச்சை நொறுக்கி 80 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி குறைந்தபட்சம் 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 12ஆவது ஓவரை வீச வந்த, இலங்கை அணியின் 20 வயதான இளம் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே, ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என ஐந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை ஒரே அடியாக சரித்தார்.

Advertisement

இதற்கடுத்து இலங்கை அணி இலக்கை நோக்கி மிகவும் தடுமாற்றத்துடன் விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பேட்டிங் செய்ய வந்த வெல்லாலகே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 46 பந்தில் 42 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நம்பிக்கை அளித்தார்.

இந்த இளம் வீரர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்த போதும் ஆட்டநாயகன் விருது தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று இவரது ஆட்டம் குறித்து பாராட்டி உள்ள லசித் மலிங்கா, “இன்று இலங்கை 12 வீரர்களுடன் விளையாடியது என்று கூறினால் சரியாக இருக்கும். துனித் மிகச் சிறப்பான வீரர். அவர் திறமையான ஆல் ரவுண்டர். பொறுப்புகளை தாங்கும் திறமையை கொண்டவராக இருக்கிறார். அவர் அணியின் முக்கியமான வீரராக மாறுவதற்கான பாதையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அடுத்த 10 ஆண்டுகள் இலங்கை கிரிக்கெட்டுகாக அவர் விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News