இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி; விடுமுறை அறிவித்தது அஸாம் அரசு!

Updated: Mon, Jan 09 2023 12:00 IST
Assam Government announces HALF Day Holiday for India vs SriLanka 1st ODI (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்திலுள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

இதையடுத்து கௌகாத்தி நகர் அமைந்துள்ள கம்ருப் மாவட்டத்துக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது அஸாம் அரசு. இதன்மூலம் அரசு அலுவலங்களும் கல்வி நிறுவனங்களும் மதியம் 1 மணிக்குப் பிறகு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதால் இத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜஸ்ப்ரித் பும்ரா, பாண்டியா. சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி, யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை