ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று குயிண்ட்ஸ்லேண்டில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது. இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து ஸ்மிருதி மந்தனா 80 ரன்காளுடனும், பூனம் ராவத் 16 ரன்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம், ஆஸ்திரேலியா மற்றும் பகலரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். அதன்பின் 127 ரன்கள் எடுத்திருந்த மந்தனா, கார்ட்னெர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து 36 ரன்கள் எடுத்திருந்த பூனம் ராவத்தும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் மிதாலி ராஜ் - யஸ்திகா பாட்டியா இணை நிதானா ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களைச் சேர்த்துள்ளது.இந்திய அணி தரப்பில் மிதாலி ராஜ் 23 ரன்களுடனும், யஸ்திகா பட்டியா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.