Pink ball test match
பகலிரவு டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் பிசிசிஐ; ஜெய் ஷா அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
சர்வதேச அளவில் கிரிக்கெட்டை வளர்ச்சியடைய செய்வதற்காக ஐசிசி தரப்பில் பல்வேறு வகையான போட்டிகள் பரிசோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வதற்காகவும், கொஞ்சம் பொழுதுபோக்கை அதிகரிக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்திய ஆடவர் அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த வகையான பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இரவு நேரங்களில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்துவதே சரியான இருக்கும் என்பதால், ஐசிசி தரப்பில் பிங்க் பால் டெஸ்ட் என்று சொல்லப்பட்டு வருகிறது. அந்த பிங்க் பால் டெஸ்டில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்ட கதை அமைந்தது.