ஓரிரு நாட்களில் அணியில் இணையும் அக்சர்!

Updated: Sat, Apr 10 2021 18:34 IST
Axar Patel Ready To Join Team In 3-4 Days, Says Delhi Capitals (Image Source: Google)

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையடிய இவர் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்காகத் தயாராகி வந்த அக்சர், கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் அவர் இடம்பெறமாட்டார் என்ற தகவல் வெளியானது. 

ஆனால் அவருக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் அக்சர் அணியில் இணைவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மருத்துவர்கள் கூறுகையில், 'அக்சர் பட்டேல் தற்போது கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இருப்பினும் அவருக்கு மேலும் இரண்டு கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதிலும் அவருக்கு நெகட்டிவ் முடிவுகள் வரும் பட்சத்தில், ஓரிரு நாட்களில் அவர் டெல்லி அணியுடன் இணைவார்' என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனது முதல் லீக் ஆட்டத்தை விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை