தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதமடித்த இமான் உல் ஹக் 57 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய ஃபகர் ஸமான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தைப் பதிவுசெய்தார்.

Advertisement

அதன்பின் 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பாபர் அசாம் இறுதிவரை விளையாடி கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்று, 94 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 101 ரன்களையும், பாபர் அசாம் 94 ரன்களையும் குவித்தனர். 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News