வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள், 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - ஹஸ்மதுல்லா ஷாஹிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் ரஹ்மத் ஷா 34 ரன்னிலும், ஷாஹிதி 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனால் 49.1 ஓவர்களிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி தரப்பில் முஷ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.