தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது. 

Advertisement

அந்தவகையில் தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாத்மான் இஸ்லாம் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ஷாத்மான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக் 4 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோ 7 ரன்னிலும் என அடுத்தடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.

Advertisement

இதையடுத்து மாஹ்முதுலுடன் இணைந்த அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் விளையாடி வந்தார். ஆனால் அவராலும் நீண்ட நேர நீடிக்க முடியவில்லை.  இப்போட்டியில் 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸும் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போதே வங்கதேச அணியானது 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்முதுல் ஹசன் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுது களமிறங்கிய வீரர்களில் தைஜுல் இஸ்லாம் 16 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா, வியான் முல்டா, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News