இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இம்மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கப்பட வுள்ளது.
Advertisement
இத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் வங்கதேசம் சென்றடைந்தது. அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
Advertisement
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஷகிப் அல் ஹசன் , முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் இன்று தங்களது அணியுடன் இணைந்துள்ளனர்.
முன்னதாக இருவருக்கும் மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து, இருவரும் சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.