ஷாகிப் இல்லாதது மிகப்பெரும் பின்னடைவு - ரஸ்ஸல் டொமிங்கோ
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இதையடுத்து ஷாகிப் அல் ஹசன் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ தெரிவித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து பேசிய அவர், “ஷாகிப் அல் ஹசன் இல்லாதது அணிக்கு ஒரு பெரிய இழப்பு. ஆனாலும் புதிதாக ஒருவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இது தந்துள்ளது. மேலும் நாளைய போட்டியில் பங்கேற்கும் இளைஞருக்கு இது சாதகமான விசயமாக இதனை நாம் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.