‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!

Updated: Tue, Jun 08 2021 22:03 IST
bangladeshs-mushfiqur-rahim-to-skip-zimbabwe-t20s (Image Source: Google)

கடந்த மாதம் வங்கதேச அணி இலங்கை அணிக்கதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் வங்கதேச அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

இத்தொடருக்கான வங்கதேச அணி இம்மாதம் 28ஆம் தேதி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய அலுவலர் ஒருவர்,‘முஸ்பிக்கூர் ரஹீம் என்னை தொலைபேசியில் அழைத்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடரில் தனக்கு ஓய்வளிக்கும் படி கோரினார். இதுகுறித்து கூடிய விரைவில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும்’ என்று தெரிவித்துள்ளார். 

வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஸ்பிக்கூர் ரஹீம், கடந்த இலங்கை தொடரின் போது ஒரு சதம், ஒரு அரைசதம் என 237 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை