இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் கடந்த டிசம்பர் 15 பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்ததன் காரணமாக 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலமானது நடைபெற்றது.

Advertisement

இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் சிம்ரன் ஷேக், ஜி கமாலினி, பிரேமா ராவத் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் டியோன்ட்ரா டோட்டின் உட்பட நான்கு வீராங்கனைகள் தலா ரூ.1 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடந்து முடிந்த இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் ஷேக் ரூ.1.9 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டதன் மூலம், இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் சென்ற வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார்.

அதேசமயம் வெஸ்ட் இண்டிஸின் டியோன்ட்ரா டாட்டினும் ரூ.1.7 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. முன்னதாக ஏலத்தில் கமலினி தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியானது பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது. அதேசமயம் டபிள்யூபிஎல் வரலாற்றில் நான்கு மைதானங்களில் இத்தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடர் அட்டவணை: 

  • பிப்ரவரி 14, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, வதோதரா
  • பிப்ரவரி 15, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வதோதரா
  • பிப்ரவரி 16, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ், வதோதரா
  • பிப்ரவரி 17, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, வதோதரா
  • பிப்ரவரி 18, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வதோதரா
  • பிப்ரவரி 19, 2025 - யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வதோதரா
  • பிப்ரவரி 21, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு
  • பிப்ரவரி 22, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ், பெங்களூரு
  • பிப்ரவரி 24, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ், பெங்களூரு
  • பிப்ரவரி 25, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு
  • பிப்ரவரி 26, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ், பெங்களூரு
  • பிப்ரவரி 27, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு
  • பிப்ரவரி 28, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு
  • மார்ச் 01, 2025  - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு
  • மார்ச் 3, 2025 - யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், லக்னோ
  • மார்ச் 6, 2025 - யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ
  • மார்ச் 7, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், லக்னோ
  • மார்ச் 8, 2025 - யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ
  • மார்ச் 10, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை 
  • மார்ச் 11, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
  • மார்ச் 13, 2025 - எலிமினேட்டர், மும்பை
  • மார்ச் 15, 2025 - இறுதிப்போட்டி  மும்பை

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News