இளம் வீரருக்கு எச்சரிக்கைவிடுத்த பிசிசிஐ!

Updated: Mon, Jul 18 2022 20:34 IST
bcci not satisfied about prasid krishna s bowling and fielding effort says report (Image Source: Google)

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 259 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சேசிங்கின் போது துவக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி எளிதாக அந்த இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும், ரிஷப் பண்ட் 125 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

மேலும் இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி அசத்தியது. கடைசியாக இந்திய அணி 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய வேளையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தொடரில் பங்கேற்று விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை பிசிசிஐ எச்சரித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா இந்திய மைதானங்களில் தனது அதிவேக பந்துகளால் சிறப்பாக பந்துவீசி தெறிக்கவிட்ட வேளையில் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த தொடரில் அவரது பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கம் இல்லை. அதோடு பவுலிங் தான் சுமார் என்றால் பீல்டிங் அதைவிட மோசமாக அமைந்தது. எளிதாக கைக்கு வந்த கேட்ச்களை அவர் தவறவிட்டார். இதன் காரணமாக அவர் மீது அதிருப்தி அடைந்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ காணொளி காட்சியின் மூலம் அவரை எச்சரித்துள்ளது.

பந்துவீச்சில் இருக்கும் குறை கூட பரவாயில்லை. பீல்டிங்கில் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இனி பீல்டிங்கில் இதேபோன்ற தவறினை செய்தால் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பது போன்ற கருத்துக்களை பிசிசிஐ அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை