ஐபிஎல்லில் 229 போட்டிகளில் விளையாடி 4,376 ரன்களை குவித்துள்ள சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர் தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடினார்.

Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை எடுக்க சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில் ஆர்சிபி அணி அவரை ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Advertisement

ஆர்சிபி அணி அவர் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காத தினேஷ் கார்த்திக், டெத் ஓவர்களில் காட்டடி அடித்து ஆர்சிபி அணிக்கு பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்து அந்த அணியின் ஃபினிஷராக ஜொலித்தார். ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு முன்னேற தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் முக்கியமான காரணம். 

எலிமினேட்டரில் கூட அபாரமாக பேட்டிங் ஆடி சிறப்பாக முடித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக், 2ஆவது தகுதிப்போட்டியில் சோபிக்கவில்லை. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டுமொரு முறை தகர்ந்தது.

ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளுக்காக ஆடிவிட்டு, இப்போது ஆர்சிபிக்காக ஆடிவரும் தினேஷ் கார்த்திக், இதற்கு முன் 2015ம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்தார். 

ஐபிஎல்லில் 6 அணிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக், தான் ஆடிய அணிகளில் ஆர்சிபி அணிக்குத்தான் அதிகமான ரசிகர் பட்டாளம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “நான் நிறைய அணிகளுக்காக ஆடியிருக்கிறேன். ஆனால் அதிகமான மற்றும் மிகச்சிறந்த ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி ஆர்சிபி தான். ஆர்சிபி ரசிகர்கள் பயங்கரமாக உற்சாகம் செய்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த மாதிரி ரசிகர்கள் இல்லாமல், என் வயதில் என்னால் இந்தளவிற்கு சிறப்பாக ஆடமுடியாது” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News