இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக மிச்சல் ஸ்டார்க் பிடித்த கேட்ச் அவுட்டில்லை என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக பேர்ஸ்டோவ் விக்கெட்டை சர்ச்சையான முறையில் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்ததும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

இப்போட்டியில் 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 193 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்திருந்த போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இருந்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது இதற்கு பின்னர் வரும் வீரர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் ஆஸ்திரேலியா அணியும் இவர்களது பார்ட்னர்ஷிப் உடைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

Advertisement

அப்போது பேர்ஸ்டோவ், கிரீஸ் உள்ளே நன்றாக பேட்டை வைத்துவிட்டு களத்தை விட்டு சற்று வெளியே வந்தவுடன் அலெக்ஸ் கேரி ஸ்டம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் கேட்டார். களத்தில் இருந்த நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் இந்த முடிவுக்கு தீர்ப்பு கேட்டனர். மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்ததார். இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் அணியினர் மத்தியில் குழப்பம் நிலவியது.

இதற்காக சர்ச்சையான முறையில் சூழ்ச்சி செய்து விக்கெட் வீழ்த்தி விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மீது தொடர்ந்து வைக்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 43 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணியின் எனக்கு எதிரான திட்டத்தை மாற்றினர். அதுதான் எனது விக்கெட்டை இழக்க காரணமாக அமைந்தது. மைதானத்தின் நீண்ட தூரமுள்ள பகுதியில் சிக்சர் அடிக்க வேண்டிய நிலை வந்தது. இருப்பினும் இந்த ஆட்டம் சிறந்ததாக அமைந்தது. 2 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், இன்னும் 3 போட்டிகள் அமைந்துள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்றிருக்கிறோம். அதனால் வரும் போட்டிகளில் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறேன்.

பேர்ஸ்டோவின் விக்கெட்டை பொறுத்தவரை, ஓவர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதா என்று நடுவர்களிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு நடுவர்கள், இல்லை என்று பதில் அளித்தார்கள். அதனால் அது அவுட் என்று தான் முடிவு செய்யப்பட வேண்டும். ஒருவேளை பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாராவது இருந்திருந்தால், நிச்சயம் நடுவர்களிடம் அப்பீலுக்கு சென்றிருக்க மாட்டேன். நிச்சயம் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் பற்றி ஆழமாக சிந்தித்திருப்பேன். 

Advertisement

என்னை பொறுத்தவரை இப்படியொரு வெற்றியை பெற வேண்டுமா என்று கேட்டால், வேண்டாம் என்றே சொல்லுவேன். நானும், மெக்கல்லமும் வீரர்களிடம் இப்படி ஆடுங்கள், அப்படி விளையாடுங்கள் என்று அறிவுறுத்த மாட்டோம். ஒருவேளை பேஸ்பால் திட்டத்தில் விளையாடினால் நிச்சயம் அவர்களை நாங்கள் அனைவரும் பாதுகாப்போம். எங்களை பொறுத்தவரை வீரர்கள் அனைவரும் தாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்ற தெளிவுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News