பவர்பிளேயில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை - ரிஷப் பந்த்!

Updated: Tue, Apr 15 2025 11:08 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த  ஷிவம் துபே 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களையும், தோனி 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்க்க, சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த், “இப்போட்டியில் ஒரு அணியாக நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். மேலும் ரன்களைச் சேர்க்க வேகம் எங்களுடன் இருந்தபோது நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். அதனால் எங்களால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. விக்கெட் கொஞ்சம் நின்று கொண்டிருந்தது, ஆனால் நாங்கள் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் சிறப்பாக செயல்படுவதாக உணர்கிறேன், ஆனால் சில நேரங்களில் அது சரியாக வருவதில்லை. இப்போது தான் நான் எனது ஃபார்முக்கு திரும்பி வருகிறேன். அதற்காக எனது நேரத்தை நான் எடுத்துக்கொள்கிறேன். பவர்பிளேயில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நேர்மறையானவற்றைப் பெற நாங்கள் பார்க்கிறோம், மேலும் நாங்கள் மேம்படுத்த முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை