நேரத்தை வீணடித்த தோனி; நடுவர்களை கடுமையாக விமர்சித்த பிராட் ஹக்!

Updated: Wed, May 24 2023 19:56 IST
Brad Hogg not impressed by officials after incident during IPL 2023 Qualifier 1! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

இருப்பினும் அப்போட்டியில் 15வது ஓவரின் முடிவில் மதிசா பதிரனா ஓய்வெடுப்பதற்காக பெவிலியன் சென்று 4 நிமிடங்கள் தாமதமாக திரும்பியதால் அடுத்த ஓவரை வீசுவதற்கு தோனி அழைத்த போது நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர். குறிப்பாக களத்திற்குள் வந்து 4 நிமிடங்கள் முடிந்த பின்பு தான் அவரை பந்து வீச அனுமதிக்க முடியும் என்று நடுவர்கள் தோனியிடம் தெளிவாக கூறிவிட்டனர். ஆனால் அந்த ஓவரை வீசுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டய 3 ஓவர்களை அவருக்காக ஒதுக்கி தோனி வைத்திருந்தார்.

அதனால் கடைசியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்காமல் போனால் அதற்கான அபராதத்தை ஏற்றுக் கொள்ள தயார் ஆனால் அடுத்த ஓவரை அவர் தான் வீச வேண்டும் என்று தோனி விடாப்பிடியாக நடுவர்களிடம் சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தினார். அதற்குள் 4 நிமிடங்கள் முடிவுக்கு வந்த நிலையில் நடுவர்களும் அடுத்த ஓவரை பதிரனா வீசுவதற்கு அனுமதி கொடுத்ததால் சுமார் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி துவங்கியது. 

அந்த வகையில் நடுவர்கள் மற்றும் விதிமுறையை தனது சாதுரியத்தால் சாதித்த தோனியின் கேப்டன்ஷிப் சென்னை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் அந்த சமயத்தில் நடுவர்கள் கூறியதும் வேறொரு பவுலரை வைத்து பந்து வீசாமல் போட்டியை வேண்டுமென்று 5 நிமிடங்கள் வரை தாமதப்படுத்திய தோனியின் செயல் நிறைய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தோனி அவ்வாறு கூறினால் என்ன? அந்த பவுலருக்கு பதிலாக வேறு பவுலரை தான் அனுமதிக்க முடியும் என்று ஏன் நடுவர்கள் சொல்லவில்லை? என எதிரணி ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

அதிலும் குறிப்பாக இதுவே மும்பையாக இருந்தால் நாங்கள் நடுவர்களை விலை கொடுத்து வாங்கியதாக பேசுபவர்கள் இப்போது அமைதியாக இருப்பது ஏன்? என்று அந்த அணி ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது போக அந்த சமயத்தில் நடுவரின் சொல்லுக்கு எதிராக செயல்பட்ட தோனிக்கு அபராதம் உட்பட வேறு எந்த தண்டனையும் கொடுக்கப்படாதது ஏன்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இந்நிலையில் அந்த சமயத்தில் சாதுரியமாக விதிமுறையை மீறிய தோனியை தட்டி கேட்காமல் நடுவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “தோனி தன்னுடைய இருப்பை பயன்படுத்தி 4 நிமிட விவாதத்தில் நடுவர்களை கவர்ந்தார். அதனால் நீண்ட இடைவெளிக்கு பின் பதிரான பந்து வீசுவதற்கு நேரம் அவுட்டானது. அந்த சமயத்தில் நடுவர்கள் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக சம்பவத்தை பார்த்து சிரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை