இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கோப்பை காண 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் தொடர் முடிவடைந்தது . கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதால் வெற்றிக்கோப்பையை அந்த அணியே தக்க வைத்துக் கொண்டது.

Advertisement

மிகுந்த பரபரப்பு இடையே தொடங்கிய 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா அணி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் இரத்தானது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

Advertisement

கடந்த ஆண்டு முதலே இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பேஸ்பால் என்ற அதிரடியான அணுகுமுறைக்கு டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை போல தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிக்கும் இந்த முறைக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அணுகு முறையில் மூலம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியான அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த பேஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அணுகுமுறையின் மூலம் இங்கிலாந்து அணி நியூசிலாந்து பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியுடன் ஆன முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிக குறைந்த வித்தியாசங்களில் தோல்வியை தழுவியது. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேஸ்பால் முறையை குறை கூறினர்.

இருப்பினும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் தொடர்ந்து பேஸ்பால் முறையில் விளையாடி மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பேஸ்பால் முறை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. தற்போது டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால் அதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளை வெற்றியை நோக்கி விளையாடுவதை வீரர்கள் தங்கள் பிரதானமாக கொண்டிருக்கின்றனர்.

இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணின் தோல்விக்கு பிறகு இலங்கை சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி தனது அணுகுமுறையை மாற்றி வேகமான ரன் எடுப்பில் ஈடுபட்டதும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கு இங்கிலாந்து அணியின் புதிய அணுகுமுறை ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வருகின்ற ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 

Advertisement

இந்நிலையில், பாஸ்பால் ஆட்டம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “எங்களது அணுகு முறையில் மூலம் நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றோம். பாகிஸ்தானிலும் சென்று 3-0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றோம். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம் . அதனால் சிறப்பாக இந்தியாவிலும் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காலம் அதற்கான பதில் சொல்லும் ” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News