விராட் கோலி கோப்பையை வெல்வதற்கு இதுவே சரியான தருணம் - பார்த்தீவ் படேல்

Updated: Sun, Jun 06 2021 16:51 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

மேலும் விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி இதுவரை எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. அதனால் இத்தொடரில் விராட் கோலி நிச்சயம் கோப்பையை கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இந்நிலையில், விராட் கோலி ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பார்த்தீவ் படேல்,“இது கிரிக்கெட்டின் முக்கிய வடிவம். எல்லோரும் ஒரு டெஸ்ட் வீரராக மாற வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் இப்போது உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட உள்ளனர். 

மேலும் இப்போது விராட் கோலிக்கு ஐசிசி கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஐசிசி கோப்பையைக் கைப்பற்றியது இல்லை. இருப்பினும் அதனைவிட டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வது சிறந்ததாக இருக்கும். அவர் கோப்பையை வெல்வதற்கு இதுவே சிறந்த தருணமும் கூட” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை