ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, உள்ளிட்ட 12 மைதானங்கள் போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் நாலு மாதங்களில் இத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் பிசிசிஐ 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு திட்டம் போட்டுள்ளது.

Advertisement

அதற்கு முன் பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் எங்கு நடத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது சென்னை தான் பாகிஸ்தான் அணி வீரர்களின் பாதுகாப்புக்கு ஏற்ற இடம் என முடிவு செய்து பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கிய லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் நாக் அவுட் சுற்றும் டெல்லியில் நடைபெறுகிறது.  இதே போன்று இந்தியாவில் உள்ள பல கிரிக்கெட் மைதானங்கள் உள்கட்ட அமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் கிரிக்கெட் போட்டி நடத்த தகுதியே இல்லாத மைதானம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர். 

இதனை கருத்தில் கொண்டு மைதானங்களை புனரமைக்க பிசிசிஐ 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அதன்படி டெல்லி மைதானத்தை புனரமைக்க 100 கோடி ரூபாயும், ஹைதராபாத் மைதானத்தை தரத்தை உயர்த்த 117 கோடி ரூபாயும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை புனரமைக்க 127 கோடி ரூபாயும், மொகாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை அழகுபடுத்த 79 கோடி ரூபாயும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தின் தரத்தை உயர்த்த 78 கோடி ரூபாயும் ஒதுக்கி பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இந்த மைதானத்தில் மேற்கூரைகள் அதிநவீன அழகிய தோற்றத்தில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றப்பட்டால், இந்த பட்ஜெட் மேலும் உயரும் எனும் கூறப்படுகிறது. இதேபோன்று மைதானத்தில் கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், இருக்கைகள் என அனைத்தும் மாற்றப்பட உள்ளது. எனினும் நான்கு மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சாபில் சண்டிகரில் ஒரு புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. 33,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி அந்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் உலகக்கோப்பை தொடர்க்கும் முன் அந்த மைதானம் தயாராவது சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News